22nd November 2018 19:55:36 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் தம்மிக ஜயசிங்க அவர்கள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை தனது பதவியை பொறுப்பேற்றார்.
படைப் பிரிவிற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை 9 ஆவது கஜபா படையணி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணி வகுத்து மரியாதை வழங்கப்பட்டன. அதன் பின்னர் பௌத்த சமய தேர ர்களான மில்லேவ சுமனதிஸ்ஸ, பெரியகுளம சுகுன தேரர் மற்றும் குடல்மில்லேவ வனரத்ன தேரர் அவர்களின் பங்களிப்புடன் பௌத்த சமய ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 621, 622, 623 ஆவது கட்டளை அதிகாரிகள் மற்றும் 62 ஆவது படைப் பிரிவின் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். buy footwear | Zapatillas de running Nike - Mujer