Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 00:07:10 Hours

புதிய கிளிநொச்சி தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக இலங்கை இலேசாயூத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்கள் தமது கடமைப் பொறுப்பை கடந்த சனிக் கிழமை (10) இப் படைத் தலைமையகத்தில் ஏற்றார்.

இதன் போது 7ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையணி படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வூகள் இடம் பெற்றது. மேலும் பௌத்த மத வழிபாட்டுகளுடன் மங்கள விளக்கேற்றி இவ் அதிகாரியவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

சில நிமிடங்களின் பின்னர் தமது அதிகாரிபூர்வ கையொப்பத்தை தனது புதிய காரியாலயத்தில் இட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இவர் சந்தன மரக் கன்றை இப் படையின் வளாகத்தில் நட்டார்.

இவ் அதிகாரியவர்கள்; மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக காணப்பட்டதுடன் ஹம்பாந்தோட்டை 12வது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவூம் இவர் காணப்பட்டதுடன் பலவாறான பதவிகளையூம் இராணுவத் தலைமையககத்தில் வகித்துள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித ரவி;ப்பிரிய அவர்கள் மற்றம் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றௌர் கலந்து கொண்டனர்.trace affiliate link | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth