24th December 2017 09:16:07 Hours
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் வருகையோடு சீதுவையில் அமைந்துள்ள விசேட படையணித் தலைமை வீரர்களால் இடம் பெற்ற விசேட பரா விளையாட்டுப் போட்டிகள் இப் படைத் தலைமையகத்தில் இன்று காலை (23) இடம் பெற்றது.
மேலும் இவ் விiயாட்டானது விசேட படையணித் தலைமையகத்தின் தலைமையில் இடம் பெற்றதுடன் இப் போட்டிகளில் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி அவர்கள் தமது திறமையினை வெளிக்காட்டியுள்ளார். இதன் போது பிரதம அதிதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த வகையில் ஆசிய சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இடம் பெற்ற படகோட்டப் போட்டிகளிலும் கோப்பிரல் ஜெ ஏ எம் பி ஜயகொடி என்பவர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் பல சாதாரண படகோட்டப போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளார்.
அத்துடன் இவர் இராணுவ பரா ஓட்டப் போட்டிகளிலும் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
இந் நிகழ்வையொட்டி மரணித்த மற்றும் அங்கவீனமுற்ற விசேட படை வீரர்களது பிள்ளைகள் 11பேரிற்கு புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் படை வீரர்களது குடும்பத்தார் மற்றும் மனைவிமார்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இப் படைத் தலைமையத்தில் சேவையாற்றும் சிவில் சேவகர்களது குடும்பத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் இவ் விசேட படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் அசங்க பெரேராவும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுடன் இணைந்து பரிசில்களை வழங்கிவைத்தார்.
இப் படைத் தலைமைய சென்டர் கெமடான்ட் பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க மற்றும் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் செனரத் யாபா பிரதி சென்டர் கெமடாண்ட் கேர்ணல் சந்திமால் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.
Asics shoes | Air Jordan