Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th September 2017 16:42:24 Hours

பாதுகாப்பு தலைமையக நிர்மானிப்பு தொடர்பாக ஜனாதிபதி கண்காணிப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அகுரேஹொடவில் புதிதாக நிர்மானித்து வரும் பாதுகாப்பு தலைமையகங்களை (5)ஆம் திகதி செவ்வாய்க கிழமை பார்வையிட்டார். அவருடன் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ மற்றும் இராணுவ தளபதி லெப்டினனன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அபர்களும் அந்த இடத்திற்கு சென்றனர்.

இந்த வளாகத்தினுள் முப்படையினர்களுக்காக அமைத்து வரும் புதிய கட்டிடங்கள் மற்றும் தொழில் நுட்ப ரீதியான நிர்மானிப்பு தொடர்பாகவும் பார்வையிட்டு இந்த கட்டிடம் தொடர்பாகவம் ஊழியர்களுடன் கருத்துக்களை பரிமாறினார். மேலும் ஜனாதிபதியினால் இராணுவ தளபதிக்கு இந்த கட்டிட நிரத்மானிப்புக்கள் சாதகமான முறையில் விரைவில் முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.

இறுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி இந்த பாதுகாப்பு தலைமையக கட்டிட நிர்மான மேற்பார்வை இராணுவ சிரேஷ்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

Authentic Sneakers | adidas Campus 80s South Park Towelie - GZ9177