19th August 2017 09:44:02 Hours
இராணுவ நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (17) பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இப் போட்டியில் 14ரெஜிமேந்துகள் மற்றும் 5 படை பிரிவுகள் உள்ளடங்களான 242நீச்சல் போட்டியளார்கள் இதில் பங்கேற்றதோடு இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் 4 பிரிவுகளைச் சேர்ந்த படை வீராங்கனைகளும் 47 தங்கப் பதக்கங்களை வெற்றியீட்டும் நோக்கில் 15 – 17 தொடக்கமான 3 நாள் போட்டியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின , இராணுவ நீச்சல் கழகத்தின் தலைவரான புதியதாக நியமிக்கப்பட்ட இராணுவ பிரதி பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ போன்றௌர் கலந்து கொண்டு இப் போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
வெற்றியீட்டிய போட்டியாளர்களின் விபரக்கோவை பின்வருமாறு
திறந்தவெளிப் பிரிவுக்கான போட்டி (ஆண்கள்)
இலங்கை இராணுவ சிங்கப் படையணி – வெற்றி
இலங்கை மின்சார மற்றும் பொறியியளார் படையணி - இரண்டாமிடம்
திறந்தவெளிப் பிரிவுக்கான போட்டி (பெண்கள்)
1ஆவது இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி – வெற்றி
2ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி – இரண்டாமிடம்
ஆரம்பப் பிரிவு (ஆண்கள்)
கஜபாப் படையணி - வெற்றி
இலங்கை இராணுவ சேவைப் படையணி - இரண்டாமிடம்
ஆரம்பப் பிரிவு (பெண்கள்)
2ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி – வெற்றி
4ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ மகளிர்ப் படையணி – இரண்டாமிடம்
Authentic Sneakers | Nike Shoes