Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2018 14:35:50 Hours

படையினரால் இரத்த தானம் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 513 ஆவது படைத் தலைமையகத்தின் 23 ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு கீரிமலையிலுள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் படையினரால் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த இரத்த தானங்கள் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தெல்லிப்பலை வைத்தியசாலையில் உள்ள டொக்டர் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

மேலும் சித்தங்கேனி சிவபூமி முதியோர் இல்லத்தில் 513 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அங்கிருக்கும் முதியோர்கள் 75 பேருக்கு மதிய உணவுகள் மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. அத்துடன் இராணுவ இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

ஶ்ரீ நாக விகாரையில் ஆசிர்வாத பூஜைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அத்துடன் 27 ஆம் திகதி காங்கேசன்துறை பொது மைதானத்தில் 513 ஆவது படைத் தலைமையக படையினர்களுக்கு இன்னிசை நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்கள் வருகை தந்து இன்னிசை நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.

கீரிமலையிலுள்ள 513 ஆவது படைத் தலைமையகத்தில் (30) ஆம் திகதி 26 ஆவது ஆண்டு பூர்த்தி தினத்தன்று படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.buy shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ