29th November 2018 22:54:30 Hours
பங்களாதேஸ் பங்களாதேஸ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை ஸ்டாப் கல்லுhரி 26 மாணவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளடங்களான குழுவினர் தமது கற்கை நெறி தொடர்பான விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் கடந்த திங்கட் கிழமை (27) சந்தித்தனர்.
பங்களாதேஷ் கடற்படையின் கெப்டன் அப்துல்லா அல் மக்ஷஸ் பங்களாதேஸ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை ஸ்டாப் கல்லுhரி மூத்த உயர் அதிகாரிகள் இலங்கை உயர் ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளர் இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அருணா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் கிட்டத் தட்ட பத்து நாள் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட இவர்கள் பாதுகாப்பு செயலாளர் பிரதி பாதுகாப்பு செயலாளர் இராணுவ கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள் போன்றோரை சந்தித்ததோடு சபுகஸ்கந்தையில் உள்ள லக்ஷ்மன் கதிர்காம சர்வதேச ஒருமைப்பாடு கல்லுhரி மற்றும் கொத்தலாவளைப் பல்கலைக் கழகம் பங்களாதேசிய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் வரலாற்று பழமை மிக்க பிரதேசங்கள் மதத் ஸ்தலங்கள் போன்றவற்றை பார்வையிடச் சென்றனர். இக் கலந்துரையாடலின் முடிவில் இவ்விரு இராணுவத் தளபதி மற்றும் பங்களாதேஸ் பிரதானிகள் இடையே நினைவூச் சின்னமும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கை இராணுவத்தின் சேவைகள் தொடர்பான விரிவான விளக்கமானது இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி அவர்களால் பங்களாதேஸ் பிரதானிகளுக்கு விரிவாக வழங்கப்பட்டது. Sports Shoes | Women's Designer Sneakers - Luxury Shopping