19th October 2018 11:35:29 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தொல்புரம் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் காணப்படும் பிரதேச வாசிகளுக்காக பெறுமதி மிக்க பொருட்கள் கடந்த வியாழக் கிழமை (18) வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் பங்களிப்போடு பல நன்கொடையாளர்களின் உதவியோடும் இடம் பெற்றது.
அத்துடன் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தெரிவூ செய்யப்பட்ட 10 குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சிறார்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்கள் போன்றவற்றையும் வழங்கி வைத்தார். மேலும் தொல்புரம் பிரதேசத்தில் காணப்படும் 15 முதியோர்களுக்கு உடைகளை வழங்கி வைத்தார். அத்துடன் இப் பிரதேச வாசிகளின் நலனையும் விசாரித்தார். affiliate tracking url | UOMO, SCARPE