Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2017 09:55:50 Hours

தேசிய விளையாட்டு ஒலிம்பிக் தீப நிகழ்வு கிளிநொச்சியில்

தேசிய விளையாட்டு விழா நிகழ்வையிட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்தை நோக்கி ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் விளையாட்டு வீரர்கள் செப்டம்பர் மாதம் 31ஆம் திகதி வந்து சேர்ந்தனர்.

கிளிநொச்சிக்கு வருகை தந்த விளையாட்டு வீரர்களை 57ஆவது படைப்பிரிவு மற்றும் கிளிநொச்சி பிரதேச nrயலகத்தின் ஒத்துழைப்புடன் வரவேற்று நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

சமாதான சுற்றுப் பயணத்தின் நிமித்தம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01ஆம் திகதி ஏந்தி வைக்கப்பட்ட ஒலிம்பிக் தீப நிகழ்விற்கு கிளிநொச்சி பிரதேச செயலகத்தின் செயலாளர் திரு அருமைநாயகம் சுந்தரலிங்கம், 57ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இறுதியில் இந்த விளையாட்டு வீரர்கள் நாட்டின் அனைத்து பிரதேசத்திற்கும் இந்த ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் செல்வதற்கான ஒழுங்குகளை விளையாட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த செயற்பாடு இலங்கையர்கள் மத்தியில் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்காக இந்த ஒலிம்பிக் தீபம் பல்வேறு பிரதேசங்களுக்கு எடுத்துச்செல்லப்படவுள்ளது.

Nike footwear | Sneaker & Lifestyle News