05th May 2017 14:38:21 Hours
சுகததாஸ உள்ளரங்க நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியில் இலங்கை இராணுவ வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் இலங்கை மகளீர் படையணியைச் சேர்ந்த இசானி சேனநாயக இவ் வருடம் 100 மீற்றர் போட்டியில் 1.02.24 நேரத்தினுள் நீச்சலை முடித்து சாதனையை நிலை நாட்டி தங்க பதக்கத்தை பெற்றுள்ளார். அத்துடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டி.எம்.சி.எல் ஜயசிங்க 50 மீற்றர் போட்டியில் வெண் பதக்கம் மற்றும் 200 மீற்றர் போட்டியில் உலோக பதக்கத்தையூம் பெற்றுள்ளார்.
இலங்கை நீர் விளையாட்டு சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய நீச்சல் போட்டி 17 ஆம் திகதி ஹன்கேரியா பூடாபேஸ்டியில் நடைபெறும் போட்டிகளுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒத்திகைகள் இடம்பெற்றது.
இராணுவ நீச்சல் மற்றும் வாட்டர் போல் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்ன அவர்களது கண்காணிப்பின் கீழ் இராணுவ நீச்சல் விளையாட்;டு வீர வீராங்கனைகள் தேசிய போட்டிகளுக்கு உள்ளிடுவதற்காக தேவையான பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்படும்.
புதன்கிழமை 3 ஆம் திகதி ஆரம்பமான இந்த தேசிய நீச்சல் போட்டிகள் சனிக்கிழமை 06 ஆம் திகதி முடிவடைந்தது.
Buy Kicks | Nike for Men