31st May 2018 18:15:30 Hours
சீன நிதிகளில் தியதலாவ இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலைய புதிய கேட்போர் கூடத்தின் கட்டுமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நிமித்தம் சீன திட்ட முகாமைத்துவ குழவினர் (30) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ படைத் தலைமையகத்தில் இராணுவ தளபதி லென்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்து கட்டுமான பணி சம்பந்தமாக கலந்துரையாடினர்.
அந்த சந்திப்பில் சீன திட்ட முகாமைத்துவ குழவினர்களின் பிரதானியான கேர்ணல் சாங் லூகுவா (Senior Colonel Chang Luhua) தலைமையில் 4 குழு உறுப்பினர்களும் சுற்றுப்பயணம் செய்த பின்னர் இவர்கள் இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்கள் முன்னேற்றம் பற்றியும் இராணுவ தளபதிகளுடன் கருத்துக்களை பரிமாறிகொண்டனர்.
புதிய கேட்போர் கூடத்தின் வளாகத்தின் கட்டுமானப் பணியின் இரண்டாம் கட்டமானது 2018 ஆம் ஆண்டு மே 8ஆம் திகதி இல் தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ பயிற்ச்சி வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் இராணுவ செயளாலர் மேஜர் ஜெனரல் அஜித் விஜய சிங்க மற்றும் இராணுவ உதவி பணிப்பாளர் கேர்ணல் உதய குமார இலங்கை திட்ட மேலாண்மை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள் .
Asics shoes | Nike Off-White