09th February 2018 18:33:22 Hours
கொழும்பு காலிமுகத்திடலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ படையணி மற்றும் விஷேட படையணியைச் சேர்ந்த இராணுவ வீரர் மூவர் முதல் தடைவையாக ‘பேஸ்ஜம்’ பரிசூட் சாகசங்களை புரிந்து மக்களை வியக்க வைத்தனர்.
அவுஸ்திரேலியாவில் ‘பேஸ்ஜம்’பயிற்சியை நிறைவு செய்த கொமாண்டோ படையணியின் மேஜர் நலின் குலதுங்க மற்றும் கோப்ரல் ஏ.எல்.ஏ பிரேமலால் மற்றும் விஷேட படையணியின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 எச்.கே.எஸ் குமாரசிரி போன்றோர் கொழும்பு சங்கிரிலா ஹோட்டல் 53 ஆவது மாடியிலிருந்து இந்த பரிசூட் சாகசங்களை புரிந்தனர்.
500 க்கும் அடி உயரத்திலிருந்து இந்த சாகசங்களை இந்த படையணினர் புரிந்தனர்.
இந்த பரிசூட்டுகள் பல நிறங்களை வர்ணித்த அழகான பரிசூட்டாக விளங்கியது.
Mysneakers | Entrainement Nike