Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2018 13:49:29 Hours

சிறுவர் பூங்கா இராணுவத்தினரால் நிர்மானிப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள உவர்மலை பிரதேசத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது ஒத்துழைப்புடன் சிறுவர் பூங்கா (15) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது எண்ணக் கருவிற்கமைய 22 ஆவது படைத் தளபதியினால் இந்த ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வின்போது குறைந்த வருமானத்தை பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 75 சிறுவர்களுக்கு படைத் தளபதி திருகோணமலை மக்கள் வங்கியுடன் இணைந்து சேமிப்பு கணக்கு புத்தகங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர, 222, 224 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரிகளான பிரிகேடியர் தீபால் புசெல்ல, கேர்ணல் பி எதிரிவீர, திருகோணமலை பிரதேச செயலாளர் அருள்ராஜ், திருமலை மக்கள் வங்கியின் பிரதி முகாமையாளர் என். ஜயவெல்வன், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

latest Nike release | Nike