Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th September 2018 18:31:56 Hours

சிறந்த அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான போட்டிகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் இராணுவத்தினர்களுக்கு இடையிலான அறிவிப்பு திறமையுள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் போட்டிகள் (16) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.

இப்போட்டிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றன. 300 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்றிய இடையில் இறுதிச் சுற்றுப் போட்டியில் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த போட்டிகளில் இலங்கையில் பிரசித்தி பெற்ற அறிவிப்பாளர்களான திருமதி திலினி அதுகோரல மற்றும் சித்ரா குமாரி பட்டபெரும பிரிகேடியர் ரவீந்திர டயஸ், திருமதி நில்மினி சிஹேரா, சமிந்த குணரத்ன மற்றும் தனஞ்ஜய நாணயக்கார அவர்கள் நடுவர்களாக இருந்து இந்த போட்டியாளர்களை தெரிவு செய்தனர்.

விஜயபாகு காலாட் படையணியின் சாஜன் பி.ஈ.எஸ் ஹரிச்சந்திர அவர்கள் சிறந்த அறிவிப்பாளராக முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டார். 4 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பீ.எச்.வயி பீரிஸ் இரண்டாவது இடத்தையும், 7 ஆவது இராணுவ மகளீர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் யூ.ஆர்.டீ.டீ.எஸ்.டீ விக்ரமசிங்க அவர்கள் மூன்றாவது இடத்தையும், 5 ஆவது சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் என்.டப்ள்யூ.வி தர்ஷன, நான்காவது இடத்தையும், 15 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த கோப்ரல் ஆர் ஜயதுங்க, ஐந்தாவது இடத்தையும், 7 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.எல்.ஜி.டீ.டி வரல்லகம ஆறாவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வெற்றியாளர்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.Asics footwear | Men's Sneakers