25th July 2018 16:00:24 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 51, 511 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வரட்சியால் பாதிப்படைந்த கோப்பாய் பிரதேசத்து மக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன.
511 படைத் தலைமையகத்தின் பூரண ஒத்துழைப்புடன் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 3620 பிரதேசவாசிகளுக்கும், 1102 குடும்பத்தாருக்கும் பயண்பெறும் வகையில் தண்ணீர் டாங்கிகள் வழங்கி நீர் வசதிகளை வழங்கி வைத்தனர்.
51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 511 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 15 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Sportswear free shipping | Nike