13th June 2018 20:15:26 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் தியதலாவையில் உள்ள அம்பேஹொட கிராம செயலக பிரிவிற்குரிய அம்பேஹொட மற்றும் மாலபுதுகாபொல்லையில் உள்ள சிறுவாவிகள் சுத்தம் செய்யும் பணிகள் (8) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மேற்கொள்ளப்பட்டன.
நான்கு வருட காலமாக கைவிடப்பட்டிருந்த சிறுவாவிகளை அவதானித்து பண்டாரவெல பிரதேச செயலகத்தினால் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணுவத்தினரால் இந்த வாவிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகளில் இராணுவ அதிகாரி உட்பட 13 படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் அப்பிரதேசத்தைச் சேர்ந்த வாழ் மக்களும் இந்த பணிகளில் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
trace affiliate link | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov