Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2018 20:32:56 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியின் மத மற்றும் அர அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையத்தின் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்கள் (06) வியாழக் கிழமை பல மதத் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் 231ஆவது மற்றும் 233ஆவது படைத் தலைமையகங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டார்.

அந்த வகையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் மட்டக்களப்பு மங்களாராமை விகாராதிபதியான அம்பிட்டியே சுமனரத்தின தேரர் மட்டக்களப்பு மாவட்ட ஆயரான அருட்தந்தை ஜோசப் பொண்னையா போன்றவர்களை சந்தித்ததோடு இவர்களின் ஆசியோடு தமது கடமைகளைப் பொருப்பேற்றார்.

மேலும் இப் படைத் தளபதியவர்கள் ஒன்றுமை மற்றும் சமாதானத்தை இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப கட்டியெழுப்பல் வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் அவர் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரான திரு எம் உதயகுமார் மற்றும் கிழக்கு மாகான பொலிஸ் அத்தியட்சகரான திரு கபில ஜயசேக அவர்களையும் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் 231ஆவது படைப் பிரிவிற்கான விஜயத்தின் போது இப் படைத் தளபதியான கேர்ணல் மிஹிந்து பெரேரா வரவேற்றதோடு; 233ஆவது படைப் பிரிவின் விஜயத்தின் போது இப் படையின் தளபதியான கேர்ணல் அணில் சமரசிறி அவர்களும் வரவேற்றார்.

இதன் பிற்பாடு இப் படைத் தளபதியவர்கள் மரக் கன்றை நட்டதுடன் படையினருடனான உரையின் போது படையினர் ஒழுக்கம் போன்றவற்றை கடைப் பிடித்தல் வேண்டுமென அவர் தெரிவித்தார். affiliate link trace | Nike Air Max 270