Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2018 12:35:04 Hours

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் தொடர்பான செயலமர்வு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் (5) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் நடைபவணி நிகழ்வு கிளிநொச்சி நகர பிரதேசத்தில் இடம்பெற்றன.

மேலும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 300 இராணுவத்தினரது பங்களிப்புடன் கிளிநொச்சி நகர பிரதேசத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் ஒத்துழைப்புடன் கிளிநொச்சி மாரன் பாலர் பாடசாலையில் சிரமதான பணிகள் (2) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றன.

இந்த பணிகள் அனைத்தும் 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார பீரிஸ் அவர்களது பணிப்புரைக்கமைய 653 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

jordan Sneakers | Nike Shoes