18th September 2018 18:46:20 Hours
படையினர்களின் தற்பாதுகாப்பு நுட்பங்கள், உடல் வலிமை, பொறுமை, தைரியம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இந்த தற்பாதுகாப்பு கலை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கை இராணுவத்தின் தற்பாதுகாப்பு கலை தொடர்பாக மேம்படுத்துவதற்காக இந்த பயிற்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த பயிற்சி விழா ஆரம்ப நிகழ்வின் போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்கள் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார்.
ரிடிகல சிங்கக்கார பராபுரி கலாகீர்த்தி கலாவிபூஷன தேவிந்த லக்சிரி ரணசிங்க அவர்களினால் ஒரு மாதகால தற்பாதுகாப்பு பயிற்சிகள் படையினர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில் 100 படையினர்கள் பங்கேற்றிக் கொள்வதற்கு உள்ளனர். Running sports | Nike