Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2018 11:31:42 Hours

கிளிநொச்சி படையினர்களுக்கு மன நல கல்வி தொடர்பான செயலமர்வு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இராணுவத்தினருக்கு தடுப்பு மருந்து மற்றும் மன நலம் தொடர்பான செயலமர்வு ஒக்டோபர் மாதம் 16 – 18 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

இந்த செயலமர்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 63 அதிகாரிகளும், 1036 படை வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தின் தடுப்பு மருந்து மற்றும் மனநல பிரிவின் விரிவுரையாளர்கள் ,வள்ளிப்பிட்டிய, அகுரஸ்ஸ மற்றும் அம்பலந்தோட்டையில் உள்ள பிரதேசங்களில் இருந்து வருகை தந்த விரிவுரையாளர்கள் இந்த செயலமர்வை நடாத்தினர். Sports Shoes | Asics Onitsuka Tiger