Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2018 16:30:35 Hours

எட்டாவது தடவையாக சிறப்பாக இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கருத்தரங்கு

இம்முறை 2018 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)' மகிழ்ச்சியான வரவேற்பு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் (30) ஆம் திகதி இன்றைய தினம் ஆரம்பமானது.

இந்த பாதுகாப்பு கருத்தரங்கு ஆரம்ப விழாவிற்கு இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது அழைப்பையேற்று பிரதம அதிதியாக கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வருகை தந்தார். இவரை இலங்கை சம்பிரதாய முறைப்படி தாள நடனங்களுடன் இந்த நிகழ்வில் வரவேற்கப்பட்டார்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. அதன் போது கௌரவத்திற்குரிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவஷம், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜயகுணரத்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் பங்களிப்புடன் மங்கள விளக்கு ஏற்றப்பட்டன. பின்னர் வரவேற்புரை இராணுவ தளபதியினால் ஆற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரினால் இந்த கருத்தரங்கில் பாதுகாப்பு அறிமுக குறிப்புகள் தொடர்பாக உரை நிகழ்த்தப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் உரையாற்றும் போது பிரதம விருந்தினர் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களையும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் வரவேற்றார். அத்துடன் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் நிலவும் பாதுகாப்பு மற்றும் சவால்களைப் பற்றிய அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான முக்கியத்துவத்தை உயர்த்தினார். மேலும் இராணுவ தளபதி "இந்த விரிவாக்கமானது, பாதுகாப்பின் நோக்கில் கவனம் செலுத்துவது, அதன் சவால்கள் நிச்சயமாக விமர்சன சிந்தனை மற்றும் பூகோள-மூலோபாய சிக்கல்களை தூண்டிவிடும் ஒரு மன்றத்தை உருவாக்கும். இதை கவனமாக வெளிப்படுத்திய தலைப்புகள் வளர்ந்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிம், அதற்காக ஆயுதமேந்திய படை எந்த பகுதியிலும் முகமளிக்க உள்ளது. இது பூகோள மூலோபாய பாதுகாப்புக் கவலைகள் மீது வெளிச்சம் தரக்கூடிய ஒரு தளத்தை வழங்குகிறது, என்று வலியுறுத்தினார்.

பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன அவர்கள் உரையாற்றும் போது, 8 வது தடவையாக இலங்கை இராணுவத்தின் சிறந்த ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 'கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இலங்கை இராணுவத்தை பாராட்டினார். அத்துடன் உலகின் வேகமான மாற்றங்கள் மற்றும் எச்சந்தர்ப்பத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும், மனித குலத்தின் அடிப்படை வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் உலகளாவிய சிக்கல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

"நாங்கள் எழுந்திருக்கும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பல்வேறு சிக்கல்களையும் பல்வேறு மாறுபட்ட சூழ்நிலைகளையும் சந்திக்கின்றோம். அந்த மாற்றங்கள் மனிதகுலத்தின் இருப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளன. அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. பாரம்பரிய சவால்களிலிருந்து அசாதாரணமான சூழல்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் பாரம்பரியமற்ற சவால்களில் இருந்து விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே, பூகோள-அரசியல் கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்துவது அவசியம், பாதுகாப்பு நோக்கமும் விவேகமான தீர்வுகளைத் தேடலும். இந்த அமர்வுகள் அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒரு துடிப்பான மூளைச்சலவைக்குச் செல்ல உதவும், இதன் மூலம் சமகால பாதுகாப்புப் பிரச்சினைகளைப் பற்றிய அறிவின் விளிம்புகள் எட்டப்படலாம், "என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்ட வாழத்துரை கானாலி காட்சிகள் திரைகளின் மூலம் முன் வைக்கப்பட்டன. அதில் இந்த கருத்தரங்கில் பங்கேற்றிய அனைவர்களுக்கும் ஜனாதிபதியினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மதிப்புக்குரிய ருவாண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், ஜெனரல் ஜேம்ஸ் கெப்ரேபே, தூதரக பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆளுநர்கள், ஓய்வு பெற்ற இராணுவத் தளபதிகள், செயலாளர்கள், மூத்த இராணுவ அதிகாரிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்த கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஆரம்ப நிகழ்வின் போது பிரதான உரை ஒன்றை வழங்கினார். அதில் பாதுகாப்பு தொடர்பில் பூகோள பிரச்சினைகளை தீர்க்கும் மற்றும் அடையாளம் காண இந்த இயல்பான அறிவார்ந்த தொடர்பை தொடர வேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டி விளக்கி உரை நிகழ்த்தினார். (அவரது பேச்சு முழு உரை பின்னர் மேற்கொள்ளப்படும்) Mysneakers | Men's Footwear