Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2018 15:32:36 Hours

இராணுவத்தினரினால் போக்குவரத்து வசதிகள்

நாட்டில் ரயில் திணைக்கள ஊழியர்களினால் நடாத்தப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய புதன் கிழமை (8) ஆம் திகதி தொடக்கம் 28 பஸ் வண்டிகள் இராணுவத்தினரினால் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த பஸ் வண்டிகள் காலி, கண்டி, சிலாபம், குருணாகல், நிட்டம்புவ, ரம்புக்கன, மீரிகம, வெயாங்கொட, கிரிஉல்ல, கம்பஹா, கனேமுல்ல மற்றும் பொல்கஹவெல பிரதேசங்களுக்கு போக்குவரத்து வசதிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் வேண்டுகோளுக்கினங்க இராணுவத்தினரால் 44 பஸ் வண்டிகள் (9) ஆம் திகதி போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் தெரிவித்தார். Sports News | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf