28th January 2019 17:59:50 Hours
கடந்த தினங்களில் இராணுவ தலைமையகத்தில் ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு செயலனியின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி திட்டமானது இன்று நாடாளவியல் ரீதியாக இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் டீ சில்வா அவர்களது தலைமையத்தில் இந்த பணிகள் ஜனவாரி மாதம் 21 – 25 ஆம் திகதி வரை இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றது.
அதன் ஒரு அங்கமாக கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு புறப்பட்டுச் சென்ற உத்திராதேவி புகையிரத்தில் பயணித்த பிரயாணிகளுக்கு கிளிநொச்சி அரியநகர் புகையிரதத்தில் வைத்து இராணுவத்தினரால் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விளம்பர பத்திரிகைகள் இம்மாதம் (27) ஆம் திகதி விநியோகிக்கப்பட்டன.
இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களது தலைமையில் 571, 574 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 7ஆவது இலேசாயுத காலாட் படையணி, 3 ஆவது கஜபா படையணி, 4 ஆவது (தொ) இராணுவ மகளீர் படையணியின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. Adidas shoes | Nike sneakers