Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2018 13:55:09 Hours

இராணுவ புலனாய்வு தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இராணுவ புலனாயுவு படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களினால் காலி கரந்தெனியவில் அமைந்துள்ள புலனாய்வு படைத் தலைமையகத்தில் கொமிஷன் அற்ற அதிகாரிகளுக்கான புதிய விடுதி (22) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிட திறப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக படைத் தளபதி வருகை தந்து ரிபன்களை வெட்டி இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்பு படைத் தலைமையகத்தின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் ஏனைய கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுடன் உறையாடலை மேற்கொண்டார்.

Nike Sneakers | Nike