11th December 2018 15:06:50 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 32 நபர்களுக்கு கற்கை நெறி பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்களுள் 15 இராணுவ படை வீரர்கள் உள்ளடங்குவார்கள்.
இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய இராணுவ பயிற்சி பணியகத்தின் பணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டில் இந்த ஒலிபரப்பு கூட்டுத்தாபன பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சிகள் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த பயிற்சியினுள் வீடியோ படப்பிடிப்பு, ஒளிபிடிப்பு, எடிட்டிங் புகைப்பட பயிற்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
58 ஆவது படைப் பிரிவிற்குரிய படையினர்கள் 15 பேர் இந்த பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளான சரங்க விஜயரத்ன, டிஎம்ஜி சந்திரசேகர , 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Mysneakers | Air Jordan