Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2018 14:46:15 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு இரத்த தானங்களை வழங்குவதற்கு முன் வந்த தமிழ் இளைஞர்கள்

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் 26 பேர் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள 231 ஆவது தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானங்களை வழங்கி வைத்தனர்.

இந்த இரத்ததான நிகழ்வு ஒக்டோபர் 10 ஆம் திகதி 231 ஆவது படைத் தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அப்போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 122 அங்கத்தவர்கள் இந்த இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.

இராணுவத்தின் 4 ஆவது கெமுனு ஹேவா படையணி, 10 ஆவது கஜபா படையணி மற்றும் 11 ஆவது (தொ) இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இந்த இரத்த தானங்களை வழங்கினர்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினரின் அனுசரனையுடனும், மட்டக்களப்பு அரச வைத்தியசாலையின் இரத்த வங்கி கிளையின் ஒத்துழைப்புடன் இந்த இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களது எண்ணக்கருவிற்கமைய 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியின் ஆசிர்வாதத்துடன் 231 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹல்ல அவர்களது தலைமையில் இடம்பெற்றன.

மேலும் இரத்ததான நிகழ்வில் 231 ஆவது படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் லயன்ஸ் கழகத்தின் அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். Adidas footwear | Nike Shoes