Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2018 13:40:37 Hours

இந்திய இராணுவ பிரதானி திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது படைப் பிரிவிற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.

இங்கு வருகை தந்த இந்திய இராணுவ பிரதானியை 22 ஆவது படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில் வைத்து இராணுவ சம்பிரதாய முறைப்படி 22 ஆவது படைப் பிரிவினால் இராணுவ அணிவகுப்பு வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களினால் இந்திய இராணுவ பிரதானி வரவேற்கப்பட்டார்.

பின்பு 22 ஆவது படைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் இந்திய இராணுவ பிரதானிகளுக்கு இடையில் பாதுகாப்பு விடயம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றன. அச்சமயத்தில் 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களும் இணைந்திருந்தார்.

இந்திய இராணுவ பிரதானி இந்த வருகையின் நிமித்தம் 22 ஆவது படைப் பிரிவில் உள்ள பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்திலும் கையொப்பமிட்டு குழுப்புகைப் படத்திலும் இணைந்திருந்தார். அதன் பின்பு திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படைத் தளத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.

latest jordan Sneakers | Air Jordan Release Dates 2020