17th February 2019 18:17:39 Hours
தமிழ் அனுசரனையாளர்களான திரு மோகன்சங்கர் மற்றும் திருமதி வதனி மோகன்சங்கர் அவர்களது அனுசரனையில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது வழிக்காட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தில் விஷேட தேவையையுடைய இரு இராணுவத்தினருக்கு இரு வீடுகள் புதிதாக நிர்மானித்து இவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த இந்த இரு விஷேட தேவையையுடைய இரு இராணுவத்தினருக்கும் வாத்துவ, கேகாலை பகுதிகளில் இந்த புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இந்த வீடுகள் நிர்மானிப்பதற்கு 2 மில்லியன் ரூபாய் செலவானது, அத்துடன் பொறியியலாளர் படையணியின் கட்டிட நிர்மான படையினரது ஒத்துழைப்புடன் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் இந்த இராணுவ வீரர்களது பிள்ளைகளுக்கு கல்வி தேவைகள் நிமித்தம் 2500/= ரூபாயும் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் பொறியியலாளர் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பொறியியலாளர் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate tracking url | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger