16th March 2018 09:08:24 Hours
பூநகரி பகுதியில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 5 ஆவது பொறியியலாளர் படையணியின் ஒத்துழைப்புடன் தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இலவச உரம் வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி இடம்பெற்றன.
பூநகரி பிரதேசத்தில் தெங்கு வேளாண்மைகளை மேற்கொள்ளும் தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இந்த இலவச உரம் வழங்கப்பட்டுள்ளன.
66 படைப் பிரிவின் ஏற்பாட்டில் மிஹிரிகம சில்வர் ஆலை நிறுவனத்தின் அனுசரனையில் நூற்றுக் கணக்கான தென்னை விதைகள் மற்றும் உரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றன.
பயிற்சி நிகழ்ச்சி திட்டம் தென்னை நாற்றுகளுக்கு கருவூட்டல் பயன்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஒரே நேரத்தில் பூநரினிலுள்ள அரசபுரகுளம் பட்டாலியன் பயிற்சிப் பள்ளியில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு இலவச உரங்களை வழங்கிய பின்னர் நடந்தது.
யாழ்ப்பாண பிராந்திய முகாமைத்துவ மண்டல முகாமையாளர் வி. விகுண்டன் உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், மரங்கள் மற்றும் பயனாளிகளுக்கு கருவுறுத்தல் என்பதன் மீதும் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
661 காலாட்படை படைத்தளபதி கர்னல் ஜி.ஆர்.ஆர்.ஆர்.ஜெயவர்தனா மற்றும் 5 (வி) எம்.ஆர்.ஆர். பட்டாலியன் தலைமையகம் ஆகியோரால் திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டது.
661, 662 மற்றும் 663 படைப்பிரிவின் படைப்பிரிவின் படைவீரர்கள், சிவில் விவகார உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் தெங்கு அபிவிருத்தி வாரியத்தின் பிராந்திய முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் எஸ். கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
latest Running Sneakers | Nike Shoes