Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th May 2018 17:28:40 Hours

66 ஆவது படைப் படைபிரிவில் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு சமூக வேலை திட்டங்கள்

66 ஆவது படைப்பிரிவிற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப்பிரிவின் படையினர்களால் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு கடந்த (8) ஆம் திகதி செவ்வாய் கிழமை சிரமதான பணிகள் மற்றும் பலா கன்றுகள் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை மேற் கொண்டனர்.

ஆந்த வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் கிளிநொச்சி பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் 66 ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக்க அவர்களின் ஆலோசனைக்கமைய 15 (தன்னார்வ) விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டனர்.

பூனரின் நகரைச் சுற்றியுள்ள வைத்திய சாலைக்கு அருகிலும் பூனரின் பிரதேசத்திலும் சிரமதான பணிகள் மேற்கொண்டதுடன் இராணுவ படையினரால் முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன் அதே போல் படையணியின் இராணுவ படையினரால் வழங்கப்பட்ட பங்களிப்புக்கும் பூனரின் வைத்தியசாலை அங்கத்தவர்களினாலும் பிரதேச மக்களும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

அதே போல் அரசாங்கத்தால் செயல் படுத்தப்படும் திட்டமான ‘ பசுமையான நாடு ” எனும் தொனிப் பொருளில் 120 பொதுமக்களுக்கு 250 பலா கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Buy Kicks | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp