Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2018 14:49:24 Hours

64 ஆவது படையினரால் வீதிகள் சீர்திருத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத் தீவு மாவட்டத்தில் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் காற்றில் வீதிகளில் உடைந்து விழுந்த மரங்களை அகற்றி பிரதேசமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிமித்தம் 64 ஆவது படைப் பிரிவின் கிழ் இயங்கும் 14 ஆவது சிங்க படையணி மற்றும் 23 ஆவது விஜயபாகு காலாட் படையணி உட்பட 30 க்கும் அதிகமான படையினர்கள் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

அதன்படி 64 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதியான பிரிகேடியர் ஜயனத் ஜயவீர அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவத்தினரால் முல்லைத் தீவூ – மான்குளம் வீதிகள் உட்பட மேலும் பல வீதிகளில் உடைந்து விழுந்த மரங்களை பல மணி நேரங்களில் அகற்றினர்.

அவசர பேரழிவு சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு பிராந்திய அதிகாரிகளால் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினருக்கு விடுத்த வேண்டுகோளிற்கமைய 64 ஆவது படைப் பரிவின் கீழ் இயங்கும் படையினர்களால் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இப் பணியை நிறைவுசெய்தனர். Authentic Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov