17th August 2018 12:52:07 Hours
குறைந்த வருமானங்களைப் பெறும் வரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான தென்னை மர நடுகைத் திட்டமானது வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் அமைந்துள்ள 61ஆவது படைப் பரிவினரால் முன்னெடுக்கப்பட்டதுடன் இவர்களுக்கான விரிவுரைக் கருத்தரங்கும் கடந்த புதன் கிழமை (15) சின்னதம்பனை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் 65ஆம் படைப் பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கில் 65பேரிற்கு புதிய முறையிலான தென்ன மர நடுகை முறைகள் தொடர்பான விரிவுரை வழங்கப்பட்டதுடன் இத் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடக்கு மற்றும் வன்னிப் பிரதேசத்தின் தென்னை மர நடுகை தொடர்பான பிராந்திய நிர்வாகப் பணிப்பாளர் அவர்கள் உள்ளடங்களான பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் தமது முழு ஒத்துழைப்பையும் இக் கிராமவாசிகளுக்கு வழங்கினர்.
இத் தென்னை மர நடுகைத் திட்டமானது 61ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் கெ டீ சி ஜி ஜெ திலகரத்தின அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்றது. Best jordan Sneakers | Buy online Sneaker for Men