Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st March 2019 12:00:23 Hours

57 ஆவது படைப் பிரிவினால் இரத்த தானங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்திருக்கும்நோயாளிகளுக்கு இரத்தம் வழங்குவதற்காக 57 ஆவது படைப் பிரிவின் கீழ் சேவை புரியும் 79 இராணுவ படையினர்கள் மற்றும் 8 அதிகாரிகள் இரத்த தானங்களை இம் மாதம் (18) ஆம் திகதி வழங்கி வைத்தனர்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தினுள் இந்த இரத்த தானங்கள் வழங்கும் நிகழ்வு 3 ஆவது கஜபா படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண இரத்த வங்கி கிளையினர் உதவிகளை வழங்கினர்.

இந்த பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது தலைமையில் இடம்பெற்றது. Sports News | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov