01st November 2018 16:12:27 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வையிட்டு புளத்சிரிபுர சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்தில் 5 ஆவது மகளீர் படையணியின் ஒத்துழைப்புடன் (23) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன இதன் போது முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கும் மின்னேரிய ஆதார வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களினால் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
கதுருவெல தம்மபால தேரர் அவர்களது தலைமையில் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்த முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திலுள்ள சிறார்கள் மற்றும் முதியோர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். 5 ஆவது மகளீர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சிரிமாலி பெர்ணாண்டோ அவர்களது பூரண ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டன.
மேலும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் மைக்கல் வன்னியாரச்சி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Nike footwear | Marki