03rd December 2018 13:55:31 Hours
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொருட்களானது பண்டகிரிய மகா வித்தியாலயத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 122ஆவது படைப் பிரிவினரின் அனுசரனையூடன் கடந்த வெள்ளிக் கிழமை (30) பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் 122ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் டபிள்யூ ஆர் எம் எம் ரத்நாயக்க அவர்களின் வேண்டுகோளிற்கமைய ஹோப் ஸ்கோப் நிறுவனத்தினர் பாடசாலை உபகரணப் பொருட்களுக்கான அனுசரனையை வழங்கினர்.
மேலும் 09 வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் பாடசாலை உபகரணப் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வில் 122ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மற்றும் ஹோப் ஸ்கோப் நிறுவனத்தினர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். jordan release date | Sneakers