Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2018 08:00:17 Hours

3ஆவது முறையாக நிறைவு செய்த ‘Martial Arts’ தற்பாதுகாப்பு கலையின் சான்றிதல் வழங்கும் நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இலங்கை சர்வதேச தற்பாதுகாப்பு கலை அகடமியின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினரின் தற்பாதுகாப்பை திறமையை மேம் படுத்தி கொள்ளும் நிமித்தம் ‘Martial Arts’ தற்பாதுகாப்பு கலை பயிற்ச்சியானது 3ஆவது முறையாக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றன. இந் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்ப படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப் படுத்தி 100க்கும் அதிகமான படையினர் கலந்து கொண்டனர். இப் பயிற்ச்சியானது சர்வதேச தற்பாதுகாப்பு கலை அகடமியின் பிரதான பயிற்றுவிப்பாளரான புஷ்பகுமார அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்டது. இந் நிகழ்வின் முடிவு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய கேட்போர் கூடத்தில் (12) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றதில் சிரேஷ்ட அதிகாரிகள் உட்படய படையினர் பலரும் கலந்த கொண்டனர். best shoes | 【国内5月2日発売予定】ナイキ ウィメンズ エアマックス ココ サンダル 全4色 - スニーカーウォーズ