02nd January 2018 18:02:10 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 244ஆவது படைப் பிரிவினரின் தலைமையில் வருடாந்த விசேட நத்தார் வழிபாட்டு நிகழ்வுகள் கத்தோலிக்க மதச் சிறார்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்போடு மூதுார் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் கடந்த வியாழக் கிழமை (28) இடம் பெற்றது.
அந்த வகையில் 100ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் நல்லிணகத்தை எடுத்துக் காட்டும் நோக்கில் சிங்களம் , தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் நத்தார்ப் பாடல்களை பாடி மகிழ்ந்துள்ளனர்.
மேலும் இந் நிகழ்வுகள் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்திற்கும் இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கில் 22ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் அருட் தந்தை ஜே சுதர்சன் 244ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் கே எச் கே கோட்டவத்தை மற்றும் 24ஆவது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எம் ஏ சி பி மாரசிங்க போன்றோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்குமான பரிசில்களை 224ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்கள் வழங்கினார்.
Sportswear Design | Sneaker & Lifestyle News