21st March 2019 10:00:23 Hours
அம்பாறையில் அமைந்துள்ள 24 ஆவது படைப் பிரிவினுள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் மேல் கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெற்றது.
24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது அழைப்பையேற்று கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களினால்இந்தமேல் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை, சிங்கர் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனம் மற்றும் சிஐசி விவசாய வியாபார நிறுவனத்தின் அனுசரனையில் இந்த மேல் கோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹா சங்க தேரர் அவர்களின் ஆசிர்வாத பூஜை வழிபாடுகளின் பின்பு இந்த கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. Nike sneakers | Nike Air Max 270