Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 20:40:03 Hours

24ஆவது படைத் தளபதியவர்களின் கௌரவ அணிவகுப்பு நிகழ்வில் அம்பாரை பொது மக்கள் கலந்து கொண்டனர்

அம்பாரை பிரதேச 24ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் கடந்த திங்கட் கிழமை (08) மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக பதவியேற்றதுடன் இவ் 24ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் ஏ ஐ மாரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் போது இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வகள் 24ஆவது படைத் தலைமையகத்தில் இடம் பெற்றதோடு இவ் அணிவகுப்பு நிகழ்வுகள் 8ஆவுது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் வழங்கப்பட்டது.

அந்த வகையில் இடமாற்றத்தை பெறும் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் அனைத்து படையினருடனான மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதோடு இவ் 24ஆவது படைத் தலைமையக புதிய தளபதியவர்களுக்கு தமது வழங்கியது போன்ற ஒத்துழைப்பை அத் தளபதியவர்களுக்கும் வழங்குமாறு படையினரிடம் தெரிவித்ததுடன் இராணுவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். அத்துடன் நிகரான முறையில் விசுவாசத்துடனும் ஒத்துழைப்புடனும் இலங்கை இராணுவத்திற்கு கௌரவம் சேர்க்கும் முறையில் செயற்படுமாறும் தெரிவித்தார். மேலும் தேசிய பாதுகாப்பிற்கான செயலாற்றிய இராணுவப் படையினரின் சேவைகள் பற்றியும் அவர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதோடு இப் படைத் தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தில் 3வருட காலம் சேவையாற்றியுள்ளதோடு படையினருக்கு சிறந்த தலைமைத்துவப் பண்பை மற்றும் பல நிர்வாக முறைகள் சேவைகள் போன்ற பெறுமதி மிக்க சேவைகளை வழங்கியுள்ளார். மேலும் இவர் நாட்டின் இக்கட்டான நிலமையில் காணப்பட்ட பிரதேசங்களில் சேவையாற்றியுள்ளார்.

மேலும் இந் நிகழ்வில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கலந்து கொண்டு தமது புதிய பதவிக்கான வாழ்த்துக்களையும் நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டமைக்கான பாரட்டுக்களையும் தெரிவித்தனர். Best jordan Sneakers | Nike Shoes, Sneakers & Accessories