Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22 ஆவது படைப் பிரிவின் சவால் கரப்பந்தாட்ட போட்டிகள்

222 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டிகள் கந்தளாயில் அமைந்துள்ள 5 ஆவது பீரங்கிப் படையணி தலைமையக மைதானத்தில் புதன் கிழமை (6) ஆம் திகதி இடம்பெற்றன.

இப் போட்டிகளில் 11 இராணுவ கரப்பந்தாட்ட அணிகள் பங்கு பற்றிய இடையில் இறுதிச் சுற்றுப் போட்டிகள் 5 ஆவது இலங்கை பீரங்கிப் படையணி மற்றும் 6 ஆவது இலங்கை படைக் கலச் சிறப்பணிகளுக்கு இடையில் இடம்பெற்றன.

இறுதிச் சுற்றுப் போட்டிகளில் 5 ஆவது பீரங்கிப் படையணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டன. இந்த அணியில் கனர் பி.ஐ.ஏ பிரேமசிரி , கனர் எஸ்.பீ.ஏ. என். எம் அமரசிங்க மற்றும் கனர் பி.ஜி.டி.எம் குமாரசிங்க அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி சிறப்பாக விளையாடினார்கள்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த 22 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் இந்த போட்டியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

Nike air jordan Sneakers | UOMO, SCARPE