Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22ஆவது படைப் பிரிவினர் காற்பந்தாட்டப் போட்டியில் வெற்றி

கிழக்கு பாதுகாப்புப் படையின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான காற்பந்தாட்டப் போட்டி திருகோணமலையிலுள்ள 22ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) இடம் பெற்றதுடன் இப் போட்டியில் 22ஆவது படைப் பிரிவினர் 1ற்கு 0என்ற விதத்தில் 23ஆவது படையினருடன் மோதுன்டு வெற்றியைக் கைப்பற்றிக் கொண்டனர்.

இவ்விரு குழுக்களுக்குமிடையே மிக விருவிருப்பான போட்டி இடம் பெற்றதுடன் 22ஆவது படையினர் ஓர் பாரிய முயற்சியின் பிற்பாடு தமது வெற்றியின் மகுடத்தை சூடிக் கொண்டனர்.

மேலும் இப் போட்டியானது 22ஆவது படைத் தலைமையக கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் 221ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சுமித் பிரேமலால் அவர்களின் கண்காணிப்பில் இடம் பெற்றது.

அத்துடன் இப் போட்டியானது கடந்;த டிசெம்பர் மாதம் 24- 27ஆம் திகதிகளில் 22, 23 மற்றும் 24ஆம் படைப் பிரிவினர் மற்றும் பராமரிப்பு வலய காற்பந்தாட்ட வீரர்கள் இடையே இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு பாதுகாப்புப் படையின் தளபதியான மேஜர் ஜெனரல் சன்துசித பன்வெல அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

இரண்டாம் நிலை வெற்றியாளர்கள் 22 படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களால் பரிசில்களைப் பெற்றனர்.

கிறிஸ்தவ மத போதகர்களான போல் ரொபின்சர் பாதிரியார் பி ஜெயபாலன் பாதிரியார் போன்றரும் இராணுவ உயர் அதிகாரிகள் பொதுமக்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.

Sportswear free shipping | Releases Nike Shoes