07th April 2018 22:24:20 Hours
இலங்கை அக்குவாட்டிக் விளையாட்டு சங்கத்தின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட 2018ஆம் ஆண்டிற்கான விளையாட்டு போட்டிகளில் இலங்கை இராணுவப் படை வீர வீராங்களைகள் 5ஆவது வருடாந்த 5கிமீ திறந்த வெளி நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் இப் போட்டிகள் அம்பலாங்கொடை மடப்ப ஆற்றில் கடந்த சனிக் கிழமை (07) இடம் பெற்றது.
அந்த வகையில் ஆண் பெண் இரு பாலாருக்குமான போட்டிகளில் இலங்கை இராணுவக் குழுவினர் ஆண்களுக்கான பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளதுடன் 10 போட்டியாளர்களில் 6இராணுவப் படையினர் வெற்றி பெற்றனர்.
ஆண்களுக்கான போட்டிகளில் சிங்கப் படையணியின் கோப்ரல் டீ எம் குணசேன முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன் அதே படையணியின் இரண்டாம் இடத்தை லான்ஸ் கோப்ரல் டி எச் கே எஸ் ஐ டி சில்வா பெற்றுக் கொண்டார்.
இப் போட்டிகளில் 26இராணுவ வீரர்கள் மற்றும் 8வீராங்கனைகள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இப் போட்டிகள் இலங்கை அக்குவாட்டிக் விளையாட்டு சங்கத்தின் தலைமையில் கிட்டத் தட்ட பல வருடங்களாக முன்னெடுக்கப்படுகின்றது.
இப் போட்டியாளர்களின் வெற்றிப் பிண்ணனியில் இலங்கை அக்குவாட்டிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் காணப்படுவதுடன் இவர் இலங்கை இராணுவ தொண்டர்ப் படையணியின் தளபதியாகவும் சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியாகவூம் முன்னர் சேவையாற்றியுள்ளார்.
இந் நிகழ்வில் இராணுவ அக்குவாட்டிக் விளையாட்டு கழகத்தின் பிரதி தலைவரான கேர்ணல் கிளிபோர்ட் டி சொய்சா மற்றும் பாரிய அளவிலான இராணுவப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
latest Running | Air Jordan