10th April 2018 19:54:21 Hours
மாதுறுஓயாவில் அமைந்துள்ள 196விடேச இராணுவ படையினருக்கான வெளியேற்ற நிகழ்வானது முப்படைத் தளபதியும் ஜனாதிபதியூமான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின பாதுகாப்பு அமைச்சின் பதவிநிலைப் பிரதானியான அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின மற்றும்; இராணுவத் தளபதயினான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க போன்றௌர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வானது திங்கட் கிழமை இன்று காலை (09) இடம் பெற்றது. அந்த வகையில் 48ஆவது விடேச இராணுவ படையினருக்கான பயிற்றுவிப்பு வெளியேற்ற நிகழ்வில் ஏழு அதிகாரிகள் மற்றும் நுற்று என்பத்து ஒன்பது சாதாரணப் படை வீரர்களும் காணப்படுகின்றனர்.
ஆந்த வகையில் விசேட இராணுவ படையானது கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு சேவையை வழங்கியவர்களாவர்.
மேலும் இந் நிகழ்விற்கு வருகை தந்த கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வரவேற்றதுடன் இவரிற்கான அணிவகுப்பு மரியாதை நிகழ்வானது விடேச இராணுவ படையினரின் பங்களிப்போடு இதன் கட்டளை அதிகாரியான மேஜர் டபிள்யூ ஆர் ஏ எஸ் எம் ரணசிங்க போன்றௌரின் தலைமையில் இடம் பெற்றது.
மேலும் விசேட அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வரவேற்றதுடன் சில நிமிடங்களின் பின்னர் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் பயிற்றுவிப்பு பயிற்ச்சிகளை நிறைவூ செய்த படையினருக்கான சின்னங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின பாதுகாப்பு அமைச்சின் பதவிநிலைப் பிரதானியான அட்மிரால் ரவீந்திர சி விஜேகுணரத்தின போன்றௌரால் மேலதிக சின்னங்களும் படையினருக்கு வழங்கப்பட்டன.
ஆதனைத் தொடர்ந்து பிரதம அதிதியவர்களால் 48 பயிற்ச்சிகளில் பங்கேற்று சிறந்த பயிற்சியாளராக சிறந்த உடற் பயிற்சியாளராக செக்கன் லெப்டினன்ட் டபிள்யூ எம் கே ஆர் வணிக சூரிய காணப்பட்டதுடன் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளராக லெப்டினன்ட் இ எம் டி பீ பீ ஏகநாயக்க காணப்பட்டதுடன் இவர்களுக்குறிய சான்றிதழ்களையும் சின்னங்களையூம் மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வழங்கி வைத்தார்.
மேலும் அங்கம்பொர எனும் தலைப்பிலான படையினரின் விடேச பயிற்ச்சி சன்டைகள் காண்பிக்கப்பட்டன.
இதன் போது மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் விடேச உரையும் நிகழ்த்தப்பட்டது. இவ் விசேட படையினரின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மேலும் விசேட இராணுவப் படையினரின் வரலாற்று ஆவணங்கள் போன்றன விவரிக்கப்பட்டதோடு இராணுவ கலாச்சார குழுவினரால் பல நிகழ்வுகளும் இடம் பெற்றன.
அதனைத் தொடர்ந்து முப்படைத் தளபதியவர்களின் வருகையை நிமித்தம் மர நடுகையூம் மற்றும் மூலிகை தோட்டம் போன்றன பார்வையிடப்பட்டது.
மேலும் இப் படையினரின் பெற்றௌருடன் கலந்துரையாடலையும் இவர் மேற்கொண்டார்.
இந் நிகழ்வில் பாரிய அளவிலான உயர் அதிகாரிகள் இராணுவ சேவா வணிதா அமைப்பின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க மற்றும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனான்வெல அவர்களும் கலந்து கொண்டார்.
latest Running | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov