Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2018 13:36:39 Hours

143ஆவது படைப் பிரிவின் நிறைவாண்டை முன்னிட்டு 500மரக் கன்றுகள் நடப்பட்டன

புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள 143ஆவது படைப் பிரிவானது தனது 08ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை கடந்த வெள்ளிக் கிழமை(30) கொண்டாடியது.

இதன் போது 143ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் தம்மிக்க திசாநாயக்க அவர்களுக்கு 16ஆவது கஜபா படையினரால் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை வேளை இரவு நேர பௌத்த மத பிரித் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் 10தேர்களுக்கு உணவுகள் போன்றன கடந்த சனிக் கிழமை (01) இப் படைத் தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன் நிமித்தமாக ரணவிரு ஹரித்த அரண மர நடுகைத் திட்டத்திற்கமைவாக படையினரால் 500 எஹெல மரக் கன்றுகள் குருணாகர் புத்தளம் வீதியில் நடப்பட்டன.

மேலும் இந் நிகழ்வுகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14ஆவது படைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் படையினர் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்போடு இடம் பெற்றது. latest Nike Sneakers | New Releases Nike