12th July 2019 22:15:05 Hours
எம்பிலிபிடியில் அமைந்துள்ள ‘எயார் மொபைல் பிரிக்கட்’ தலைமையகத்தின் 20 ஆவது புதிய கட்டளை தளபதியாக கொமாண்டோ படையணியைச் சேர்ந்த கேர்ணல் D. N. J பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி தனது கடமையை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின் பொறுப்பேற்றார்.
புதிய கட்டளை தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் கட்டளை தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற் கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் பங்கேற்றிக் கொண்டார்.
இச்சந்தர்ப்பத்தில் 12 ஆவது சிங்கப் படையணி, 1. 5 கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த கட்டளை அதிகாரிகள் மற்றும் பிரதான பயிற்சிவிப்பாளர்கள் இணைந்திருந்தனர். jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧