Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th April 2019 13:29:45 Hours

‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை பயிற்சிகள் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் முன்வைப்பு

ஏறக்குறைய 9500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கைக்கான முன்னைய தற்காப்பு கலையான ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலையானதுஉள்நாட்டினுள் ஒரு குறிப்பிட்ட சுய-தற்காப்பு சண்டை நுட்பமாக பயன்படுத்தப்பட்டது.இது ஜோதிடம், தியானம், மருத்துவம் போன்ற விடயங்களை உள்ளடக்கியிருந்தது.இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களது ஆசீர்வாதத்துடன், முன்னாள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவண அவர்களினால் இந்த கருத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போதைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜீத ரவிப்பிரிய அவர்கள் இந்த தற்பாதுகாப்பு கலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் ஒரு தனிப்பட்ட கிராம சூழலை அமைத்து இராணுவர்களுக்கு இந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றார். Sports brands | Nike Shoes, Clothing & Accessories