Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை பொற்ற இராணுவ ஜூடோ வீரர்கள்

பொதுநலவாய ஜூடோ போட்டியானது நவம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை இந்தியா ஜெய்பூர் நகரத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் இலங்கை தேசிய ஜூடோ கழகத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ ஜூடோ வீரர்கள் போட்டியிட்டு 2 வெள்ளிப் பதக்கம் 3 வெண்கலப் பதக்கத்தை பெற்றனர்.

அதன்படி ஆணைச்சீட்டு அதிகாரி ஐ கே.எல்.சி.கே லீமகஸ்தென்ன (எடை 60 க்கு கீழே) மற்றும் சாஜன்ட் எஸ்.பி.ஜீ.பி.பி யசரத்ன (எடை 81 க்கு கீழே) எடை துhக்கி வெள்ளி பதக்கத்தை வென்றனர்.

அதே போல் ஆண்கள் பிரிவில் லான்ஸ் Nகாப்ரல் எச்.எம்.எம்.பீ.செனவீரத்னா ( எடை 60 க்கு கீழே) மற்றும் கோப்ரல் ஏ.எச்.எம்.விக்ரமசிங்க ( எடை 90 க்கு கீழே) போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். அதன் படி மகளிர் பிரிவில் கே.எம்.பீ.கே. லியனகே ( எடை 57 க்கு கீழே) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அதற்கமைய இராணுவ ஜூடோ கழகத்தின் தலைவர் பிரிகேடியர் மாரசிங்க அவர்களின் பரிந்துரைக்கமைய இந்த ஜூடோ வீரர்கள் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். trace affiliate link | Sneakers