22nd October 2018 19:19:42 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்கள் தனது பதவியிலிருந்து விடைபெற்று இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் (22) ஆம் திகதி காலை வழங்கப்பட்டன.
இந்த அணிவகுப்பு மரியாதைகள் தியதலாவையில் உள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றது. இந்த அணிவகுப்புகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் ராகுல வீரசிங்க அவர்களது தலைமையில் 18 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படைத் தளபதி படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். அதன் பின்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் படைத் தளபதி கலந்து கொண்டார்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை புத்தகத்தில் கையொப்பமிட்டு பாரமளித்தார். அச்சந்தர்ப்பத்தில் 11, 12 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் இணைந்திருந்தனர். Best jordan Sneakers | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!