Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th July 2019 22:30:05 Hours

வவுனியாவில் இராணுவத்தில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்னிசை நிகழ்ச்சி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம், 56 ஆவது படைப் பிரிவு, வவுனியா ட்ரேடர்ஷ் மற்றும் வவுனியா முஸ்லீம் சமூகத்தினர் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியானது வவுனியாவில் இம் மாதம் (6) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

‘ஒன்றாக இருப்போம்’ எனும் தொனிப் பொருளின் கீழ் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த இன்னிசை நிகழ்ச்சியானது இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சியானது இலங்கையில் புகழ் பெற்ற தமிழ் இன்னிசை குழுவான அக்னி குழுவினர்கள் வழங்கியிருந்தனர். இந்த இன்னிசை நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பாடகர்களான M சிவகுமார், நவகம்புர கணேஷ், நிலுக்‌ஷா ஜயவீரசிங்கம், முகமட் வாபா, ரொயி ஜெக்ஷன், சமீர ஹஷன், இமாலி பதிரன, மரியா விஜயலக்‌ஷ்மி அவர்கள் கலந்து கொண்டு இன்னிசை விருந்துகளை வழங்கி வைத்தனர்.

அத்துடன் ‘சைன் எரவ்ஷ்’ , ரெட் அரவிஷ்’ நடன குழுவினர்களும் கலந்து சிறந்த நடனங்களை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த இன்னிசை நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, வவுனியா ட்ரேடர்ஷ் நிறுவனத்தின் பொது செயலாளர் திரு I. M ஹனிபா அவர்கள் வருகை தந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் H. P செனவிரத்ன மற்றும் கட்டளை தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பெரும்பாலான பொது மக்கள் கூட்டம் நிறைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | Nike SB