Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

வன்னி விளையாட்டு போட்டிகள் நிறைவு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் அனைத்து படைப் பிரிவுகளில் பணியில் இருக்கும் இராணுவத்தினரின் உடல்வலிமை மற்றும் ஆற்றலை ஊக்குவிப்பதன் நிமித்தம் இப் படைத் தலைமையகத்தினரால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் 2018க்கான படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி கடந்த (05)ஆம் திகதி சனிக்கிழமை அனுராதபுரத்தில் அமைந்துள்ள வடமத்திய விளையாட்டுமைதானத்தில் இடம் பெற்றன.

இவ் விளையாட்டு போட்டியானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய விளையாட்டு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்இ 2019 ஆம் ஆண்டிட்கான திறமையான வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பதன் நிமித்தம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21, 54, 61, 62, ஆவது படைப் பிரிவுகள் மற்றும் வடமத்திய முன்னரங்க பாதுகாப்பு பகுதியில் சேவையில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் பங்களிப்புடன் இப் போட்டி ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை இடம் பெற்றன.

அத்துடன் இவ் போட்டியில் விளையாட்டு போட்டி இந்த ஆண்டு தொடர்ச்சியான போட்டிகளில் விளையாட்டு வீர் வீராங்கனைகளின் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியடைந்தன மேலும் இது இராணுவத்தில் இராணுவ வீரர்களின் வளர்ச்சிக்கு ஒரு சான்றாக இருந்தது.

இப் போட்டி இறுதியில் 241 புள்ளிகளை பெற்று 62 ஆவது படைப் பிரிவினர் முதலாவது இடத்தை பெற்றதுடன் 154 புள்ளிகளை பெற்று 21 ஆவது படைப் பிரிவு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டன.

அதற்கமைய இப் போட்டியானது 54 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் பண்டார அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப்பிரிவுகள் மற்றும் படையணியின் படையினர்களின் பங்களிப்புடன் இந் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டது.

இப் போட்டி நிகழ்விற்கு சான்றிதல் மற்றும் வெற்றிக் கிண்ணம் வழங்குவதற்கு பிரதான அதிதியா வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டியை பார்வையிட அனைத்து படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டன. Authentic Nike Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival